M.R.V.Creations

நாலாயிர​ திவ்ய​ ப்ரபந்தம்


Login     New User Signup


Sloka Vice - Explanation:

NAALAAYIRA DHIVYA PRABHANDHAM - நாலாயிர​ திவ்ய​ ப்ரபந்தம்


MUDHALAAYIRAM - முதலாயிரம்


Srimathe Ramanujaya Namaha - ஷ்ரீமதே ராமானுஜாய​ நமஹ​

।। திருமழிசை ஆழ்வார் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம் ।।


திருமழிசை ஆழ்வார் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம் - பாடல் 42 ( பிரபந்தத்தில் பாடல் 793 )

793
வேறிசைந்த செக்கர்மேனி நீரணிந்த புன்சடைக்
கீறுதிங்கள் வைத்தவன்கை வைத்தவன்க பால்மிசை
ஊறுசெங் குருதியால் நிறைத்தகார ணந்தனை
ஏறுசென்ற டர்த்தவீச பேசுகூச மின்றியே. 42

Transliteration - English


।। Thirumazhisai Aazhwar Arulichcheitha - Thiruchchandha Viruththam ।।

Thirumazhisai Aazhwar Thiruchchandha Viruththam - Paadal 42 ( Song 793 in Prabandham )

Verisaindha sekkarmeni neeranindha punsadaik
Keeruthingkal vaiththavankai vaiththavanka baalmisai
Ooruseng kurudhiyaal niraiththakaara nandhanai
Yerusendra darththaveesa pesukoocha mindriye. - 42

மொழிபெயர்ப்பு


திருமழிசை ஆழ்வார் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம் - பாடல் 42 ( பிரபந்தத்தில் பாடல் 793 ) - பொருள்

வேறு - விலக்ஷணமாக; இசைந்த - ஸம்ஹார கார்யத்துக்குப் பொருந்தியிருக்கும்; செக்கர் - கோபத்தால் சிவந்த; மேனி - சரீரத்தையுடையவனாய்; நீறு - பஸ்மத்தை; அணிந்த - தரித்தவனாய்; புன் - சிக்குப் பிடித்து மெலிந்த; சடை - ஜடையையுடையவனாய் ;

கீறு - கலாமாத்ரமான; திங்கள் - சந்த்ரனை; வைத்தவன் - அந்த ஜடையிலே தரித்தவனான ருத்ரன் ; கை - கையிலே; வைத்த - ஏந்திய; வன் - விடவொண்ணாத; கபால்மிசை - கபாலத்திலே;

ஊறு - ஊறா நின்றுள்ள ; செம் - சிவந்த; குருதியால் - ரத்தத்தாலே; நிறைத்த - பூரித்த; காரணந்தனை - காரணத்தை;

ஏறு - எருதுகளை; சென்று - மேல்விழுந்து; அடர்த்த - கொன்ற; ஈச - ஸர்வேஸ்வரனே; பேசு - அருளிச் செய்யவேணும்; கூசமின்றியே - கூச்சம் சிறிதுமின்றியே;




Translation


Thirumazhisai Aazhwar Thiruchchandha Viruththam - Song 42 ( Song 793 in Prabandham ) - Meaning

With an appearance not beautiful and apt for performing destruction with a body that is reddish due to anger which is smeared with sacred ash all over and matted tresses

and who is adorning the crescent moon who is God of passion, is Lord Rudhra and he holds in his hand beheaded skull of the fifth head of Brahma which refuses to leave his hand

with blood oozing and you filled it in order to help Rudhra get rid of it.

Without any hesitation proclaim that you are the saviour of all the Gods too and the Primordial God who is unscathed even while fighting the seven bulls and killing them to prove your valour to Nappinai Devi.


Om Namo Narayanaa!!



Sarvam Krishnaarpanamasthu! Om Tat Sat!